Header image alt text

செய்திகள்:-

Posted by plotenewseditor on 4 August 2020
Posted in செய்திகள் 

1. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,834ஆக அதிகரித்துள்ளது. Read more

நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவொன்றை அங்கொடை தேசிய தொற்றநோயியல் நிறுவனத்தில் ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் Covid–19 அவசர சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். Read more

சட்டவிரோதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். Read more

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறை ஒன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வலதுகுறைந்தோர் இரசியத் தன்மையை பேணி வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செஞ்சிலுவை சங்க வவுனியா கிளையின் முன்னாள் தலைவருமான சிவநாதன் கிசோர், அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்த செஞ்சிலுவை சங்கத் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அன்டன் புனிதநாயகம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்வதாக வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 3 August 2020
Posted in செய்திகள் 

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் தேர்தல் கடமை குறித்து விளக்கமளிக்க யாழ் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Read more

பாராளுமன்ற தேர்தல் – 2020- தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள். 

#யாழ்_மாவட்டம் 

(யாழ்ப்பாணம்,கிளிநொச்சி)

தர்மலிங்கம் சித்தார்த்தன் – இலக்கம் 6 ,

பாலச்சந்திரன் கஜதீபன்- இலக்கம் 7

#வன்னி_மாவட்டம்(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)

கந்தையா சிவலிங்கம் – இலக்கம் 4 ,

ஜி.ரி.லிங்கநாதன்-இலக்கம் 5

#மட்டக்களப்பு_மாவட்டம்

மு.ஞானப்பிரகாசம் – இலக்கம் 7

Read more

இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பாளர்களும் தமது பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினமிரவு வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 2 August 2020
Posted in செய்திகள் 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2,514 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 291 ஆக குறைந்துள்ளது. இன்றைய தகவலின்படி புதிதாக 75 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். Read more