தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன், மற்றும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினத்தை முன்னிட்டு, வவுனியா எங்கும் பரவலாக அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. Read more
யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியான குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் உள்ளிட்டோரின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் செம்மணியில் அனுஷ்டிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், அதனை தோல்வியடைய செய்வதற்கும், நிபந்தனைகள் இன்றி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,123 ஆக பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று மதியம் பயணித்த சொகுசு பேரூந்து சாலியவௌ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய், பூதர்மடம் பகுதியில் நேற்று மதியம் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.