மாத்தறை பொல்ஹேன பிரதேச சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. இந்த நபர் உட்பட ரஷ்ய நாட்டவர்கள் 15 பேர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி மத்தல விமானநிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அவர்கள் நேற்று ரஷ்யா திரும்பவிருந்த நிலையில் மாத்தறை தனியார் வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில் மற்றைய நபர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த ரஷ்ய நாட்டவர்கள் குழுவில் மூவர் மாத்தறை வர்த்தக நிலையங்களுக்கு நேற்று முன்தினம் ஆட்டோவில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருந்த ஹோட்டலின் 23 பேர் தனது வீடுகளுக்கு சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் குடும்பத்தினர் உட்பட ஊழியர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளமை தொடர்பில் தகவல் சேகரித்து வருவதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.