 திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 10 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 10 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more
 
		     20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 39 மனுக்கள், இன்று நான்காவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுப்படுத்தவே கடந்த வாரம் அனுமதி வழக்கப்பட்டிருந்தது.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 39 மனுக்கள், இன்று நான்காவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுப்படுத்தவே கடந்த வாரம் அனுமதி வழக்கப்பட்டிருந்தது.  கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த குறித்த இரண்டு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த குறித்த இரண்டு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று மேற்கொள்ளபட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று மேற்கொள்ளபட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பெண்ணின் மகளுக்கு, கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அவருடன் ஒன்றாகக் கல்வி கற்ற, 31 மாணவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி, திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், இச்சிறுமி தினமும் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பெண்ணின் மகளுக்கு, கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அவருடன் ஒன்றாகக் கல்வி கற்ற, 31 மாணவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி, திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், இச்சிறுமி தினமும் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாக பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆசனங்களின் எண்ணிகைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாக பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆசனங்களின் எண்ணிகைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றுகுள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து வெளியேறியுள்ளார். வைத்தியசாலையில் இருந்து மகிழுர்ந்தில அவர் வெளியேறும் காணொளி பதிவு வெளியாகியுள்ளது. இதன்போது, வீதியின் இருமருங்கிலும் இருந்த அவரின் ஆதரவாளர்கள் டொனால்ட் ட்ரம்புக்கு ஆரவாரம் தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
கொரோனா தொற்றுகுள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து வெளியேறியுள்ளார். வைத்தியசாலையில் இருந்து மகிழுர்ந்தில அவர் வெளியேறும் காணொளி பதிவு வெளியாகியுள்ளது. இதன்போது, வீதியின் இருமருங்கிலும் இருந்த அவரின் ஆதரவாளர்கள் டொனால்ட் ட்ரம்புக்கு ஆரவாரம் தெரிவித்து வரவேற்றுள்ளனர்.