sdsகாணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை வெளியிடக்கோரி, வவுனியாவில் இடம்பெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள், மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம், 4 ஆவது நாளாகத் இன்றையதினமும் தொடர்கின்றது.