arrest (17)சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, லெல்லாமா பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது.