Header image alt text

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Read more

dffffffffffffநில ஆக்கிரமிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், யாழ். மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்றுகாலை 10.00 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் மிக ஆக்ரோசமாக தமது கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்தனர். நல்லாட்சி அரசாங்கமே கேப்பாபுலவில் நில ஆக்கிரமிப்பினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் காணிகளை மீளக் கையளி, வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், Read more

sமட்டக்களப்பு மாவட்ட தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நேற்றுக்காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சாத்தவீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடத்திவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 1600ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது நியாயமான கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள குறித்த பட்டதாரிகள் தேர்தல் காலங்கள் வரும்போது மட்டும் தங்களை நாடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். Read more

sfdவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்றுகாலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமயத் தலைவர், முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிஸார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர். Read more