சட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.