புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 14ஆம் திகதித்து முன்னதாக மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல எனவும், புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்களுக்குப் பதிலாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் ராஜித மேலும் கூறியுள்ளார்.