 புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவரை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இதற்கு முன்னர் தொழில் மற்றும் தொழற்சங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளார். அடுத்த வாரம் முதல் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
