Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரித்து வெற்றிபெறச் செய்வோம்-அனந்தி சசிதரன்-(படங்கள் இணைப்பு)

punnalaikattuvaan (9)யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நேற்றுமாலை 6.30மணியளவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இவர்களுடன் வலிமேற்கு சமூக மேம்பாட்டுக் கழக ஆலோசகர் டேவிட், முன்னைநாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர் கேதீஸ்வரநாதன், முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். Read more

விடுதலைப் பயணத்தை தடையின்றித் தொடர கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்-வேட்பாளர் த.சித்தார்த்தன்-

sdfdfdfdதமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 7இல் போட்டியிடும் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூ;டடமப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.

Read more