Header image alt text

ஏழாலை மேற்கில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு புளொட் தலைவர் வாழ்த்து- (படங்கள் இணைப்பு)

elalai (3)யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலின்கீழ் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வசிக்கும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஏழாலை மேற்கில் நடைபெற்ற இம்முறை ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் கடந்த 13.08.2015 அன்று நடைபெற்றபோது புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தார்கள்.

Read more

அவுஸ்திரேலிய ஆளுநர் புதிய உயர்ஸ்தானிகரிடையே சந்திப்பு-

sfdfdfdஅவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுள்ள சோமசுந்தரம் ஸ்கந்தகுமாருக்கான நியமனக்கடிதத்தை அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்குரோவ், கன்பெராவிலுள்ள அரச இல்லத்தில் வைத்து இன்று வழங்கிவைத்தார்;. இந்த நிகழ்வில், புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோருக்கும் இடையே கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆளுநர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையுடன் உறுதியான பங்குதாரராக இருப்போம்-பிரித்தானியா-

britishஇலங்கையில் நல்லிணக்கமும் நீண்ட சமாதானமும் உருவாகியுள்ள நிலையில், இலங்கை அரசுடன் ஒரு உறுதியான பங்குதாரராக நாம் இருப்போம் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமொன்ட் தெரிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த வெற்றிக்கொண்டாட்டதின்போது பிரித்தானிய அரசின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார். இம்முறை நடைபெற்ற தேர்தல் விதமானது, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிரதமர் ரணில் விக்கி;ரமசிங்கவுடனும் புதிய அரசாங்கத்துடனும் தொடர்ந்து நல்லுறவைப் பேண எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசுடன் இணைந்து செயற்பட தயார்-சீனா-

sri lanka chinaபுதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக சீனா நம்புவதாக தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் ஹ_வா சுனின் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நடைபெற்று முடிந்த தேர்தல் ஒழுங்குமுறையாக மற்றும் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பாரப்பதாகவும் கூறியுள்ளார்.

உதய கம்மன்பிலவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை-

uthaya kammanvilaகுற்றப்புலனாய்வுத் திணக்களத்திற்கு தன்னை வரவழைத்து 2மணி நேரத்திற்கும் அதிகமாக தன்னிடம் விசாணை மேற்கொண்டதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஒருவருடன் இணைந்து நிறுவனம் ஒன்றின் பணத்தை மேசடி செய்ததாக தனக்கெதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றுகாலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். தன்மீது சேறுபூசும் நோக்கில் பொய்யான முறைப்பாடொன்றை சம்பிக ரணவக்க மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்தபோதிலும், தேர்தல் ஆணையாளரின் உத்தரவிற்கிணங்க தேர்தல் முடிந்தபின் இன்று தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சஷி வீரவன்ச நிதி மோசடிப்பிரிவில் ஆஜர்-

sashiதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச இன்று பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளார். இதேவேளை சஷி வீரவன்சவிற்கு செஹாசா உதயந்தி ரணசிங்க என்ற பெயரிலும் தேசிய அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சஷி வீரவன்ச இரண்டு முறை நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் வசித்து வருகின்ற கடுவலையில் உள்ள இல்லம் மற்றும் அதன் காணி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி, லால் காந்த பதவி விலகல்-

thondaஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று கிடைக்கபெறவுள்ளதாக தெரியவருகிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 61,897 விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டார். இந்நிலையில், அமைச்சுப்பதவி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இ.தொ.கா.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தேசிய அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் பொருட்டே தான் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார். லால் காந்த இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இத்தாலி செல்ல முயன்ற யாழ்ப்பாண யுவதி கைது-

airportஅபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அன்பு இல்லத்திற்கும் பாரதி இல்லத்திற்கும் வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பு-

vvயாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக நேற்றைய தினம் முத்தையன்கட்டு அன்பு இல்லத்திற்கும், முள்ளியவளையில் உள்ள பாரதி இல்லத்திற்கும் 90,000 ரூபா நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந் நிதியானது கனடா வாழ் புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில் வசிக்கும் திருமதி பரணி தர்மராஜா அவர்கள் 30,000 ரூபாவும், கனடாவில் வசிக்கின்ற திருமதி தம்பு சித்திரா அவர்கள் 10,000 ரூபாவும், கனடாவில் வசிக்கும் திரு. குமாரசாமி பிரபாகரன் அவர்கள் 50,000 ரூபாவும் நிதியுதவி செய்துள்ளனர்.
(தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம் – படங்கள் இணைப்பு)

Read more

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சுதந்திரக் கட்சி அனுமதி-

slfpதேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார் இத்தகவலை சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேடகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எவ்வாறான ஒத்துழைப்புகளை சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளது. இதற்கு புறம்பாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் யாரும் செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு-

DSC_0190நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கும் எமது கட்சியின் கொள்கைகளுக்கும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு கிடைத்த வாக்குகள் எமது அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.

எதிர்காலத்திலும் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த எமது அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்பதையும், மாகாணசபை உறுப்பினர் என்ற முறையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து செயற்திட்டங்களும் பாரபட்சமற்ற முறையில் பரந்த அடிப்படையில் செயற்படுத்தப்படும் என்பதனையும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
Read more

ஒன்றாக முன்னோக்கி செல்ல ரணில் அழைப்பு-

ranilஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்க தமது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவுடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தார். இதன்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான மக்கள் ஆணையே இந்த பாராளுமன்ற தேர்தலின் மூலம் கிடைத்துள்ளது. அதன் பிரகாரம், அடுத்த அரசாங்கத்தின் பிரதமராக பொறுப்புகளை ஏற்று நான் செயற்படவுள்ளேன். இணக்கப்பாட்டுடன் முன்னோக்கி செல்வதற்காகவும் தேசிய செயற்பாட்டிற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து, அந்த பொறுப்புகளுடன் அல்லது பாராளுமன்றத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற பொறுப்புகளோடு இணைந்து, அதன்மூலம் மாற்று வழிகளை ஆராய்ந்து ஒன்றாக முன்னோக்கி செல்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டு மக்களின் பிரச்சினையை அவதானித்து, அப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நாடாளுமன்றில் அனைவரையும் இணைத்து கொள்ளவேண்டும். அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கூறியுள்ளார்.

அண்மைக்கால வரலாற்றில் சிறந்த தேர்தல்-பவ்ரல்-

paffrelபவ்ரல் அமைப்பு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி, அண்மைக்கால வரலாற்றில் தாம் அவதானித்த சிறந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் என்பதை எவ்வித விவாதங்களும் இன்றி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார். எனினும், கடந்த பல தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் குறைவான வன்முறைச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான பொலிஸ் திணைக்களம் செயற்பட்டதாகவும் தெரிவித்தார். இடமாற்றம் வழங்கப்படும் விடயத்தில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் சிறப்பானது என பாராட்டிய ரோஹன ஹெட்டிஆராய்ச்சி, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொள்ளும் போது இத் தேர்தலை மிகவும் சிறப்பான தேர்தலாகவே தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – பிரித்தானிய கிளை-

PLOTEvஅன்பார்ந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்!

நடைபெற்று முடிந்த இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெருமளவில் வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். 

வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்யாமலும், வாக்களிக்கத் தயங்காமலும் உங்களது முழுமையாக வாக்குகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியத்தின் பிரதிநிதித்துவம் பலமானதொன்றாக அமைய வழிசெய்திருப்பதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நீங்கள் மீண்டும் உறுதிசெய்துள்ளீர்கள். 

தற்போதைய சர்வதேச சாதகச் சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தியிருப்பது, தமிழ் மக்களது நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை நோக்கிய செயற்பாடுகளுக்கு வலுச் சேர்த்துள்ளது.  Read more

தேசிய பட்டியல் உறுப்பினர்களை ஒரு வாரத்தினுள் நியமிக்க அறிவுறுத்தல்-

election.....பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பட்டியல்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் முடிவுகள் அடங்கிய பட்டியல்கள் மற்றும் தேசிய பட்டியல் மூலம் கட்சிகள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கிடைத்ததும் அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

புதிய அரசாங்கத்துக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் வாழ்த்து-

ban ki moonஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளில் மேலும் முன்னோக்கி செல்வதற்கு வழியமைக்க வேண்டும் என ஐ.நா செயலர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து சமாதானம் மற்றும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஐ.நா சபை தயாராக இருப்பதாகவும் பான் கி-மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்-

european unionநடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் சரியான நிர்வாகம் காணப்பட்டதனால் அமைதியான தேர்தலை ஒன்றை நடத்த முடிந்ததாக தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் தலைவர் கிரிஸ்டியன் பெரேடா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மற்றும் தன்னுடன் வருகை தந்திருந்த குழுவினரும் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். விஷேடமாக சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – பிரான்ஸ் கிளை

ploteஅன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!

முப்பது வருட போராட்டத்திற்கு பின்பும் எமது சமூகம் சலிப்படைந்து போனவர்கள் அல்ல என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான வெற்றி எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எமது கட்சி வேட்பாளர்களையும் அதிகப்படியான வாக்குகளால் வெற்றியடையச் செய்த உங்களுக்கு பிரான்ஸ் கிளை மனமார்ந்த நன்றிகளைத் தெரவித்துக் கொள்கின்றது.

மேலும், நாம் எமது நாட்டையும் எமது மக்களையும் விட்டுப்பிரிந்து எவ்வளவு தூரம் சென்று மேலைத்தேய நாடுகளில் இருந்தாலும்கூட உங்களை மறவாமல் எங்கள் பிரதிநிதிகள் ஊடாக சில சேவைகளை எங்களால் உங்களுக்கு செய்யக்கூடியதாக இருக்கின்றது. தொடர்ந்தும் எமது பணிகள் தொடரும்.

Read more

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் எஸ்.வியாழேந்திரன்

vimalதமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் என்றும் சேவையாற்றுபவர்களாக இருப்போம் என மட்டக்களப்பு மாவட்டத்தில் புளொட் அமைப்பின் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தம் மீதும் தமது கட்சி மீதும் கொண்ட பற்றுக் காரணமாக அணி திரண்டு வாக்களித்துள்ளதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படுவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து புதுமுகவேட்பாளராக களமிறங்கியிருந்தேன். இதற்கு களம் ஏற்படுத்தி தந்த தலைவர் சித்தார்த்தனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் மட்டக்களப்பில் எனக்கு அமோக ஆதரவினை தந்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள். நாங்கள் அந்த மக்களுக்கு நன்றி கூறுவது மட்டுமன்றி அவர்களுக்கு சேவையாற்றுவேன்.

எதிர்காலத்தில் கிராமம் கிராமமாக சென்று மக்களோடு மக்களாக இணைந்து அவர்களோடு இணைந்து செயற்படும் ஒருசேவகனாக செயற்படுவேன். அமோக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.