Header image alt text

ஆனந்தசங்கரியுடன் இணைகிறார்? கருணா

karunaகருணா அம்மான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்கு இலக்கான இலங்கை இராணு வீரர்கள் இராணுத் தளபதியுடன் சந்திப்பு

D silvaஅரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையின் வீரர்கள் சிலர் இன்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.
2010ம் ஆண்டு கட்டாயப்படுத்தல் காரணமாக ஓய்வுப் பெற்ற முப்படைகளி்ன வீரர்கள் 40 பேர் கடந்த தினங்களில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் பரிந்துரைக்கமைய அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அந்த 40 பேரில் இராணுவப் படையை சேர்ந்த 15 வீரர்கள் இருப்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்

எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின்  எற்பாட்டில் புதிய இலங்கையினை (Unity Mission trust) உருவாக்கும் நோக்குடன் புதிய உலகம், புதிய இலங்கை, புதிய வழிகள் போன்ற எண்ணக்கருவில் அமைந்த எட்டாவது இளைஞர் மாநாடு நேற்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. Read more

ஐநாவின்  அரசியல் விவகாரங்களுக்கான  குழுவினருடன் தேசிய கலந்துரையாடல்களுக்கான  அமைச்சர் மனோ கணேசன சந்திப்பு

manoஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை தலைமைச் செயலாளர் மிரஸ்லாவ் ஜென்கா தலைமையிலான குழுவினருடன் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் நடத்திய சந்திப்பின்போது, இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக நாடெங்கிலும் கலந்துரையாடல் மையங்களை உருவாக்கவுள்ளதாவும் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் அமையவுள்ள இந்த கலந்துரையாடல் மையங்களில் சமூக மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறார். Read more

கதிர்காமரைக் கொலை செய்ய அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியதா?

Kadirgamarமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு அப்போதைய அரசாங்கத் தரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதா? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு பணம் வழங்கியமைக்கும் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என எவராலும் மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார், நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியிருந்தது.
கதிர்காமர் கொலைக்கும் பணம் வழங்கப்பட்டமைக்கும் இடையில் தொடர்பு இருக்கக் கூடிய வலுவான சாத்தியங்கள் காணப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடி தாங்க முடியாமல் குற்றத்தை ஏற்றுக்கொண்டேன் கொண்டயா என்பது ஊடகங்கள் வைத்த பெயர்

Kondayaசேயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று பிற்பகல் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சேயா சிறுமியை தான் கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் பொலிஸார் என்மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாததன் காரணமாக அவர்கள் எழுதிக் கொடுத்த தாள் ஒன்றில் கையெழுத்திட்டதாக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த மேலும் தெரிவித்தார்.
என்னை எவருமே கொண்டயா என்று அழைத்ததில்லை என்றும் நண்பர்கள் கூட துனேஷ் என்றே அழைப்பார்கள். கொண்டயா என்பது ஊடகங்களால் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
நண்பர் ஒருவரின் வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே என்னைக் கைது செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவரது சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறுகiயில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அல்லது வேறு மோசமான சம்பவங்கள் சம்பந்தமான எந்த வழக்குகளும் இவருக்கு எதிராக இல்லை என்று தெரிவித்தார்.

கிழக்கில் ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; 
 
batticaloa_templeஇனந்தெரியாத நபர்கள் சிலர் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம் போல அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார். உடனடியாக நிருவாக சபையினர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தி,  பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி கிராமத்தில் உள்ள இத்தியடி விநாயகர் ஆலயத்தில் பிரதேச மக்களால் வழிபட்டு வந்த விநாயகர் உருவக் கல் விஷமிகளினால் நேற்று வெள்ளிக் கிழமை இரவு திருடப்பட்டு பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல் குறித்த ஆலயத்திற்கு இன்று காலை வழிபடச் சென்ற பொதுமக்கள் சிலர் ஆலயத்தில் விநாயகர் உருவக் கல் இல்லாததையும் சுவாமி உருவப்படங்கள் தூக்கி வீசப்பட்டிருப்பதையும் ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தற்போது மேற்படி ஆலயத்தில் சுவாமியின் உருவக் கல்லானது வைக்கப்பட்டுள்ளதால் பிராயச் சித்த பூஜை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேற்படி உருவக் கல்லானது கடந்த வருடமும் இதே போன்று பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து அதே இடத்தில் பிராயச் சித்த பூஜை செய்யததாகவும் தெரிவித்தனர்.
எனவே மேற்படி விடயம் அடிக்கடி இடம் பெறுவதனால் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

 

மூன்று வாரத்தில் மீண்டும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு-

meetingஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முன்மொழிவுகள் சம்பந்தமாக அனைத்து கட்சிகளின் பேச்சுவார்த்தையை தெடர்ந்து நடத்திச் செல்ல அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஆராயும் பொருட்டு கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் 03 வாரங்களில் மீண்டும் கூடி இது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 23 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் உட்பட மேலும் விஷேட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வட மகாhணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்); உதவி-(படங்கள் இணைப்பு)

photo 1வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து பெறப்பட்ட பத்து அலமாரிகள் நேற்று (22.10.2015) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் பாரதி சிறுவர் இல்லத்தில் நேற்றுமாலை 5மணியளவில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது மேற்படி அலமாரிகளை பாரதி சிறுவர் இல்ல நிர்வாகி திருமதி மகேஸ்வரி அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற வாணி விழாவிலும் மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசன் பவன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வின்போது சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளும், நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆம் ஆண்டு நிறைவு தினம்-

united nationsஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன நாளையதினம் (24.10.2015) கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் விஷேட நிகழ்வுகள் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன் கடந்த 21ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார பிரதி செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

dsdfdfdfddddமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (20.10.2015 முத்தான வியர்வை என்னும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. உள்ளுர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தான வியர்வை என்னும் இந்நிகழ்வின்போது உள்ளுர் உற்பத்தியாளர்களிடையிலான போட்டி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஏற்பாட்டாளரான பவானி அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்வினில் விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), பிரதேச செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் பெண்கள், இளைஞர்கள், ஊர்ப்பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது-

vimalகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்றுகாலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முற்பட்டவேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிந்திய தகவலின்படி விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைது-

prasanthanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று காலை காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தம்பதியான இருவரினதும் கொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததன் பிரகாரம், பிரசாந்தன் நேற்று வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான பிரசாந்தனின் சகோதரன் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தை-

fishermen talksஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் இப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயங்கள் இதன்போது சம்பாஷணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் வடபகுதி மீனவர் தரப்புகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு, 33பேர் காயம்-

accidentபுத்தளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தளம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா பிரேரணையை தோற்கடித்தே தீருவோம்-வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkஇலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை, தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்றுஇடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் அமுனுகம அமைச்சராக பதவிப் பிரமாணம்- தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்-

amunugamaகலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இன்றுமுற்பகல் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார். விசேட பணிகள் அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை அரிசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரி திலக் கொலுலுரே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பிராங் டி சில்வா ஆகியோரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீர மிரோஸ்லாஃப் ஜென்கா சந்திப்பு-

UN officerஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம், மிரோஸ்லாஃப் ஜென்கா, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தொடரின்போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீமூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

Posterஇலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நாட்டின் பல பாகங்களிலும் ஆர்பாட்டங்ள் முன்னெடுக்கப்படவுள்தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

ஜெனீவா யோசனை தொடர்பில் அனைத்து கட்சி மாநாடு-

Presidential Secஜெனீவா யோசனை தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து கோரும் அனைத்து கட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கலந்துகொள்ள தீர்மானித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்து கொள்ளவுள்ளதாக குழுக்களின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

ஐ.நா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்-பர்ஹான் ஹக்-

farhan hugயுத்தத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஐ.நா தொடர்ந்து, அழுத்தம் கொடுக்கும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இது குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார். நிச்சயமாக நாம் எப்போதும், பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். தொடர்ந்தும் அதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் பர்ஹான் ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய விசேட பிரதிநிதி பிரதமர் ரணில் சந்திப்பு-

ranilஜப்பான் அரசின் விஷேட பிரதிநிதியாக நாட்டுக்கு வருகை தந்துள்ள மோடோ நோகுச் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிபுணரான மோடோ நோகுச் பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் இலங்கையின் உள்ளக விசாரணைகளுக்கு பூரண ஒத்தழைப்பை பெற்றுக் கொடுப்பதாக அவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெஸ்மன் சில்வா என்ற பெயரில் அறிக்கையில்லை-பிரதமர்-

ranilஇறுதியுத்த காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் டெஸ்மன் சில்வா என்ற பெயரில் அறிக்கையொன்று இல்லை என பிரதமர் இன்று உறுதிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் ஜெனீவா மனிதவுரிமைகள் யோசனை தொடர்பான விவாதத்தின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது உரையில், ஸ்ரீமத் டெஸ்மன் டி சில்வா, மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை மாத்திரமே வழங்கியதாக குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் தொடர்பான ‘மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்காக ஸ்ரீமத் டெஸ்மன் சில்வா மற்றும் ஸ்ரீமத் ஜேப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இன்றுகாலை தாம் டெஸ்மன் டி சில்வாவுடன் உரையாடியதாக தெரிவித்த பிரதமர், அவரின் பெயரில் அறிக்கையொன்று இல்லையென தாம் உறுதிப்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார். 

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்-

briberyலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டைடஸ் போதிபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் லால் ரஞ்சித் சில்வா மற்றும் சந்தரநாத் நெவில்லே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அதன் தலைவராக பேராசிரியர் சிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளதோடு, அன்டன் ஜெயநாதன், எம்.பீ.எச்.மனதுங்க, வை.எல்.எம்.ஷவாகீர் மற்றும் சாவித்திரி விஜேசேகர ஆகியோரும் இதல் அடங்குகின்றனர். இதேநேரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தலைவராக தர்மசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.சலாம், வீ.ஜெகராஜசிங்கம், நிஹால் செனவிரத்ன, டாக்டர் பிரதீப் இராமானுஜம், எம்.எஸ்.செனவிரத்ன, தாரா விஜயதிலக, டீ.எல்.மென்டிஸ், எஸ். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோ துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு-

norway tamil ladyநோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்ணமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இவர் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பிறந்த இவர் தனது 3 ஆவது வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாகச் சென்றிருந்தார். தற்போது 27 வயதில் தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கல்லாண்டகுளம் சுற்றுலாத்தலம் மேம்பாடு குறித்த கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

20151012_155040வவுனியா கல்லாண்டகுளத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலத்தினை மேம்படுத்துவதற்காக வட மாகாண சபையின் உள்ளூராட்சி அமைப்பினால் ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான வேலைத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் அண்மையில் கல்லாண்டகுளம் நாதன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், சனசமூக நிலய உத்தியோகத்தர் வஜீபா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ராயப்பு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read more

உயர்மட்ட அதிகாரிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை-

sri lanka (4)வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியனுப்புதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அரச ரகசியங்களை வெளிப்படுத்தல், அரச கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டமை மற்றும் திறனற்ற வகையில் பணியாற்றியமை உள்ளிட்ட காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சில அதிகாரிகள்மீது லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்காக தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்பாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

ஆசிரியர் தின நிகழ்வுகள் பிளவத்தை பாடசாலையில் இடம்பெற்றது-(படங்கள் இணைப்பு)

P1090966யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசத்தில் அமைவு பெற்றுள்ள வட்;டு வடக்கு சித்தன்கேணி பிளவத்தை அ.மி.த.க பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10.2016 அன்று பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பின் கௌரவ. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சி ஐங்கரன் அவர்கள் ஆசிரியர்களின் உயர்வான அர்ப்பணிப்பான செயற்பாட்டினை கௌரவித்து நற்சான்றிதல் வழங்கி கௌரவித்துக் கொண்டார். இவ் நிகழ்வின் போது குறித்த பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து ஆசிரியர்கட்கு வாழ்த்துக்கைளையும் தெரிவித்துக் கொண்டனர்.
Read more