ananthi sasitharanயுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி முதல் தான் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், பாதுகாப்பு தரப்பிடம் சரணடைந்த தனது கணவர் உள்ளிட்ட குழுவினர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் அனந்தி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.