manatungaதேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவராக பீ.எச் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறை ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் எஸ்.ஜீ ஹெட்டிகே பதவி விலகியதை தொடர்ந்து தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. பின்னர் ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான பீஎச் மனதுங்கவை குறித்த பதவிக்கு நியமிக்க அரசியலமைப்பு சபையால் தீர்மானிக்கப்பட்டு அது ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்து.