chandrikaநல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் பாடசாலைகளின் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது தலைமையில் இயங்கும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம், கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பாடசாலை பாடவிதானத்தில் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியம் என்பவற்றை உள்ளடக்க கல்வித் திணைக்க ளம் உறுதியளித்துள்ளதாகவும் சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.