vvddவவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு இன்று வந்த வைத்தியர் குழு, உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் மயக்கமடைந்தால், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் அங்கிருந்தவர்களிடம் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், “மரணிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம், மயக்கமுற்றாலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டாம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இறுதி தகவலின்படி நான்குபேரின் நிலைமை கவலைக்கிடமான தெரியவருகிறது.