j3 (1)இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மனி நாட்டை சேர்ந்த 30000 ரூபா பெறுமதியான புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. பாரதி இல்ல பெண்கள் சிறுவர் இல்லத்தால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு தமது இல்ல சிறார்கள் 102 பேருக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கி அவர்களும் எல்லோரையும் போன்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஒத்துழைப்பு தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இப் புத்தாடைகளை பொன்ராசா குலசிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

கடந்த மாதம் 19ம் திகதி ஜெயசுந்தர் கலைவாணி தம்பதிகளினால் 30000 ரூபா பெறுமதியான 22 சிறார்களுக்கான புத்தாடைகள் வழங்கி வைத்துள்ளதை தொடர்ந்து இன்று ஜேர்மன் நாட்டை சேர்ந்த குலசிங்கம் அவர்களால் 20 சிறார்களுக்கான புத்தடைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதுடன்.மொத்தமாக புத்தாண்டை முன்னிட்டு 42 சிறார்களுக்கான புத்தடைகள் வழங்கி வைக்கபட்டுள்ளது. இன்று தமது பிறந்த நாளை முன்னிட்டு இக் கைங்கரியம் செய்துள்ள பொன்ராசா குலசிங்கம் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

J j1 J2