deadதெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தின் இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள், இன்று காலை 7.15மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படோவிட்ட பிரதேசத்துக்கு அருகில் உள்ள லேக்சைட் ஹோட்டலுக்கு பின்புறமாக உள்ள கால்வாயிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த ஹோட்டலின் முன்புறமாகவுள்ள படோவிட்ட பாலத்துக்கு அருகில், கால்வாயில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தெஹிவளைப் பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இந்த இரு சடலங்களும், இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.