NATPITIMUNAகல்முனை, நற்பிட்டிமுனைக் கிராமத்தில் 30 வயதுடைய ஆணொருவரின் சடலம், அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து, இன்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நற்பிட்டிமுனை, கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது30) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர், நேற்றுப்பகல், தனது 30ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும் நண்பர்களுக்கு விருந்து வைத்துக் களிப்பதிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அதேவேளை, இவரது உறவினர் முறையான ஒருவர் இறந்த ஒருவருட ஆண்டு அமுது (ஒரு வருட திவசம்) இன்றையதினம் என்பதால் அதற்காக பொருட்கள் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்துள்ளார். இவரது, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.