Header image alt text

accident (2)கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பஸ்யால பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35பேர் படுகாயடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஆட்டோ ஒன்று சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

kilinochchi schoolமுல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு இன்று கலைந்து, கொட்டியதில் 46பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, விசுவநாதர் ஆரம்வித்தியாலய 30 மாணவர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலய 9 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். Read more

sfdfdயாழ். மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் திறந்துவைக்கப்படவுள்ளது.

வடபகுதி மக்கள் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ranil al hussainசுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் ஹ_சைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

assdaகிளிநொச்சி உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம்மை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும் காந்தி சிறுவர் இல்லத்தினரிடம் தெரிவித்துள்ளனர். Read more

solomoதென் பசிபிக் பெருங்கடலில் 8.0 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்த குறித்த பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசுபிக் பிராந்தியத்தின் பவ்கேயின்வில்லே தீவிற்கும், சொலமன் தீவின் பிரதான மையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 167 கிலோமீற்றர் ஆழமான பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிராந்திய புவியியல் ஆய்வுப்படி 8.0 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த பிராந்தியங்களிலுள்ள இந்தோனேசியா, டோங்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நியூ கலிடோனியா பப்புவா நியூகினியா, வனுவாட்டு மற்றும் நவ்ரூ ஆகிய பகுதிகளில் 0.3 மீற்றர் உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read more

IMG_1718தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், பூவரசன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் பூவரசு இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான சுற்றுவேலி, கடினபந்து துடுப்பாட்ட ஆடுகள நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா பூவரசன்குளம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் பூவரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ நோகராதலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு வாசலை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் மற்றும் Read more

werererகிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர். Read more

ranilநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை கூறவில்லை என்பதால், அது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது என நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும், பிரித்தானியாவுடன் தனியான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். Read more

ezhuka thamilதமிழ் மக்கள் பேரவையால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுகதமிழ் நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.