hgfhggமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. அத்தோடு அருகில் இருந்த துவிச்சக்கர வண்டி உதிரிப்பாக கடை ஒன்றும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீப்பரவல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தீயை ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது வர்த்தகர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த உணவகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட எதிர்மறை மின் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  இந்த தீ விபத்தின் காரணமாக இரு வர்த்தக நிலையங்களிலும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவ்விடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.