sdfdsfsdfஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் தொடர்பில் தனது முகநூல் ஊடாக வசைபாடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய், கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு?, துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய் போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர். யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழியாக வந்து மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. 

gfgfg ggfgf sddfsddf sdfsdfds