யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் வழங்கப்படாது தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களில் இருந்துவரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை தமக்கே வழங்கக்கோரி இன்றுடன் 13ஆவது நாளாக தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் தொடர்ச்சியாக நில மீட்பிற்கான சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தில் இன்று வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களும் பங்கு பற்றியதுடன். தமிழ் புலம்பெயர் அமைப்பான லண்டனைச் சேர்ந்த எதிர்காலத்திற்கான பாதை என்ற அமைப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கேப்பாபுலவு மக்களுடன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 200 மதிய உணவு பொதிகளையும் சுமார் ரூபா 60,775 பெறுமதியான உலர் உணவுப்பொருட்களான அரிசி 200கிலோ பால்மா 30 பெட்டி சீனி 100கிலோ ரின்மீன் 25 தேயிலை 10கிலோ சோயா 10கிலோ பருப்பு 25கிலோ பிஸ்கட் 10 பெட்டி நுளம்புத்திரி 10பெட்டி கற்பூரம் 10 பெட்டி என்பவற்றையும் வழங்கியுள்ளது. Read more








