முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள வித்தியபுரம் பகுதியில் தீயினால் தமது வீட்டினையும், நுண்கடன் நிதிப்பணமாக பெற்று வைத்திருந்த 60,000 ரூபாவினையும், தமது உடமைகளையும் இழந்து நிர்க்கதியான காளிதாஸ் சரஸ்வதி குடும்பத்தினரை
வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு மாவட்ட செயலகம் ஊடாக தற்காலிக தரப்பாள் மற்றும் சில சமையல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.