Header image alt text

aயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து, இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read more

Q6வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்த்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 100 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்று எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டைச் சேர்ந்த சிவதீபன் நந்தினி தம்பதிகளின் திருமண ஆண்டை முன்னிட்டு கடந்த யுத்தத்தின்போது தமது கணவனை இழந்து தங்களின் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் 100 பிள்ளைகளக்கு புத்தகபைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. Read more

ssசட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிப்பிற்கு அமைய, யாழ்ப்பாண சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேர் நேற்று இரவு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் தாயகம் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊர்க்காவற்துறை பதில் நீதவான் சபேசன் முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

23.03 (4)வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த 23.03.2017 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திரு. செ.புஸ்பநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் அமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், FEED அமைப்பின் செயலாளர் ஐ.யசோதரன், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.ஜேசுதாசன், கிராம அலுவலர் பா.பாலகிரிதரன், உலக உணவுத் திட்ட அதிகாரி எஸ்.கிரிதரன், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் வே.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் மாணவச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 4000/- பெறுமதியான அனைத்து பரிசுப் பொருட்களையும் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் வழங்கியிருந்தனர். Read more

vavuniya new bus standபெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழடையுமுன் மாற்று ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்­துள்ள­னர்.

திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும், ஒத்­து­ழைப்பு இன்­மை­யா­லும் 195 மில்­லி­யன் நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் கால்­ந­டை­க­ளி­ன­தும் நாய்­க­ளி­ன­தும் கூடா­ர­மா­க­வும் விளங்­கு­கின்­றது. மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திக்கு உகந்த வகை­யில் பயன்­ப­டுத்த உரிய திட்­ட­மி­டலை மேற்­கொண்டு ஆவன செய்ய வேண்­டும். Read more

Geneva UNஇலங்­கை­யில் மைத்­திரி-– ரணில் ஆட்­சி­யி­லும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் சாட்­சி­யங்­க­ளு­டன் கூடிய ஆவ­ண­மொன்று ஐ.நா மனித உரிமைகள் சபை­யின் மீளாய்­வுக்கு பன்­னாட்டு மனித உரி­மை­கள் அமைப்­பால் முன்­வைக்­கப்­பட்டுள்­ளதாக தெரியவருகின்றது.

தென்­னா­பி­ரிக்கா ஜொஹா­ன்ஸ்­பேர்க்­கைத் தள­மா­கக் கொண்­டி­யங்­கும் இலங்­கை­யின் உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்டு வரை மைத்­திரி ரணில் ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற 48 கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்­களை உள்­ள­டக்­கிய இந்த ஆவ­ணத்தை ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் மீள்­பார் வைக்கு முன்­வைத்­துள்­ளது. Read more

accident (3)மட்டக்களப்பு ஏறாவூர் களுவன்கேணி, கோறளங்கேணியில், முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், களுவன்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுஜித் (வயது 22) என்பவரே, தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, உயிரிழந்துள்ளார். Read more

norvayநோர்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது. இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் ‘உலகின் முதல் கப்பல் சுரங்கம்’ உருவாக்கப்படவிருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது. Read more