Header image alt text

ewrreதிராய்க்கேணி படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. படுகொலை சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயிர்நீத்த உறவுகளின் உருவப்படத்திற்கு அவர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். Read more

misமன்னார் வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் (சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்றுமாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் மாணவன் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

thalatha gaminiபுதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரள இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா தனது பதவிப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்து கொண்டார். இந்த பதவிப்பிரமாணங்கள் இரண்டும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. நீதியமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிகமாக நீதி அமைச்சையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

woundedகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

குப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்ததிலேயே இவ்விருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது, அங்கு நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக, மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் வாகனத்தில் ஏற்றி யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

housing schemeமீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரால பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வீடுகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. Read more