Header image alt text

raviவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 32 பேரின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவிடம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

fewr30 வருட யுத்தத்தினால் வீடுகளை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தமக்கும் இந்திய அரசின் உதவி திட்ட அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படும் பொருத்து வீடுகளை வழங்குமாறு கோரி திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more

doctorஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு போலியான மருத்துவப் பட்டங்களை வழங்கி வந்த நான்கு பேருக்கு கொல்கட்டா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கட்டாவில் செயற்பட்டு வந்த அவர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் இந்திய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். Read more

dssdsயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸாரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. Read more