Header image alt text

IMG_5916ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு இன்று (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவன்(இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்)அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) இளைஞரணி செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more

1தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடான இளைஞர் கழகங்களின் சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழாக வழங்கப்பட்ட வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் குழாய் கிணறு மற்றும் மலசல கூட தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வு இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்ஷன் தலைமையில் நேற்றையதினம் (04.08.2017) நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு ஆர்.சசிகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் திரு ரவி, தீடீர் மரண விசாரணை அதிகாரி திரு லாசர் சுரேந்திரசேகரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் திரு தே.அமுதராஜ், மாவட்ட சம்மேளன உறுப்பினர் திரு நிபாத் ஆகியோருடன் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more

sssssssssssமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக ஆரம்பித்துள்ளனர்.

1968ம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் குடியிருந்து பின்னர் 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தற்போது நல்லாட்சி அரசின் மூலம் இராணுவ பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் தங்களுடைய காணிகளையும் பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர்கள் எட்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  Read more