Header image alt text

sriபுத்த மதத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் புதிய யாப்பில் நீக்கப்பட மாட்டாது. ஒற்றையாட்சி அல்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப்படாது என்றும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நீக்கப்படாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read more

?????????????

D.Sithadthan M.P

யாழ். பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலய ஆதிமூல லக்ஸ்மி நாராயண அமுதசுரபி கற்கோவளம் ஈசான அன்னதான மடத்திற்கான புதிய மண்டபத்தினை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (29.09.2017) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30மணியளவில் திறந்து வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்படி புதிய மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், மேற்படி மடத்தினுடைய நிர்வாகத்தினர், கல்விமான்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

noticeயாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடையதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியே குறித்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை வடக்கில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

sddfநுண் கடன் திட்டத்தினால் வடக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வட மாகாணத்தினைத் தளமாகக்கொண்டு, பல நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. Read more

deadவித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, மரண தண்டனைக் கைதிகளின் எணணிக்கை அதிகரித்துள்ளது.

வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடை ஏழு குற்றவாளிகள் அடங்கலாக, இலங்கையில் 1159 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மஹர, வெலிக்கட, குருவிட்ட, பதுளை, களுத்துறை மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

27.09 (4)புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். சித்தங்கேணி ஸ்ரீ கணேஷா வித்தியாலயத்திற்கு பல் ஊடக எயிறீ (Multimedia Projector) மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னைநாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

NPCவட மாகாண சபை உறுப்பினர்கள் பதினாறு பேர் அடங்கிய குழுவினர் அடுத்த மாதம் புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வின்போது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காகவே அவர்கள் புதுடில்லி பயணமாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

kalan rangadeniyaஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டிரங்க கலன்சூரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கான, கடிதத்தை உரிய தரப்பிடம் கையளித்துள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

sri lankan refugees australiaஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்.

மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், இரண்டு குழுக்களாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள 1250 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர். Read more

sarath fonsekaதாம் கட்டளை இட்ட எந்தவொரு இராணுவத்தினரையும் சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர், ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது கருத்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இராணுவத்தினருக்கு எதிராக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. Read more