அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளே இந்தப் பத்து மனுக்களையும் தாக்கல் செய்யவுள்ளனவென, தகவல் வெளியாகியுள்ளது.
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக, நாடாளுமன்றத்தின் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அந்த திருத்தம், உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின், அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளனவென தெரியவந்துள்ளது. Read more