Header image alt text

frontயாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் அவர்கள் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராமமான கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் மற்றும் வட மாகாண கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

P1460233யாழ். ஏழாலை சன்மார்க்க முன்பள்ளிக் கட்டிடத்திற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (29.08.2017) உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்படி கட்டிடத்திற்கென 3லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உதவி வழங்கும் நிகழ்வில் சன்மார்க்க முன்பள்ளியின் நிர்வாகி மல்லி ஆசிரியை. பிரதேச செயலாளர் மதுமதி, முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.

iiiiஅமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணியளவில் வண.கலாநிதி சு.ஜெபநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தல், மௌன அஞ்சலி என்பன இடம்பெற்று தமிழ் தாய் வாழ்த்து இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் திருஞானசம்பந்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். பெரிய பள்ளிவாசல் மௌலவி ஆகியோர் வழங்கவுள்ளனர். Read more