முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இன்று (28.08.2017) நடைபெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில், வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கமநல, மீன்பிடி துறைகளின் அமைச்சர் க.சிவநேசன் கலந்து கொண்டிருந்தார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையில் 03வது கட்டமாக வடக்கின் 04 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அதிலும் முல்லை மாவட்டத்தின் 06வதும் இறுதியுமான நடமாடும் சேவையாக இன்றைய நிகழ்வு நடைபெற்றது. Read more