Header image alt text

putinரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள 755 தூதரக அதிகாரிகளையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

trtrrவீட்டுத்திட்டம் வழங்கக் கோரி, சாந்தசோலை கிராம மக்கள், வவுனியா மாவட்ட செயலகத்தை, இன்றுகாலை 11 மணிக்கு, முற்றுகையிட்டனர்.

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவித்து, வவுனியா மாவட்ட செயலாளரிடம், மகஜர் ஒன்றும் கையளித்தனர். Read more

IMG_5362தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட 2107 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளின் உதைபந்தாட்ட தேசிய மட்ட போட்டிகள் 27.07.2017 முதல் பதுளை மாவட்டத்தில் நடைபெற்றது. இவ் ஆண்டுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டிக்கு வவுனியாவில் இருந்து வவுனியா பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் தனது திறமையினை செவ்வனே வெளிப்படுத்திய 786 இளைஞர் கழகம் தேசிய மட்டத்தில் பல மாவட்ட அணிகளை வீழ்த்தி இவ் ஆண்டு மூன்றாம் இடத்தினை தனதாக்கியுள்ளது.

இவர்களுக்கான மாபெரும் வரவேற்பு நிகழ்வு கிராம மக்களின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.கே.மஸ்தான், முன்னாள் நகர சபை உறுப்பினர் பாரி, கிராம சேவகர் நசார், சமூக ஆர்வலர் ஆரிப், இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், Read more

human right commission sri lankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, கடந்தாண்டின் கடைசிக் காற்பகுதியில், 1,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவ்வாணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின்படி, இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்படி, 680 முறைப்பாடுகள், ஆணைக்குழுவின் எல்லைக்குள் காணப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 132 முறைப்பாடுகள், முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின்படி, அதிகளவிலான முறைப்பாடுகளாக கண்டி மாவட்டத்திலிருந்து 244 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. Read more

towநடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் கனடா கிளையினர் வடக்கு மாகாணத்தில் வறிய, தூர இடங்களில் இருந்து பாடசாலை செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு மொத்தமாக 18 சைக்கிள்களை வழங்கியிருந்தனர். 
முதற்கட்டமாக, யாழ்ப்பாணத்தில் 02 சைக்கிள்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 சைக்கிள்களும், வவுனியா மாவட்டத்தில் 08 சைக்கிள்களும் வழங்கப்பட்டிருந்தன. 
அதன் தொடர்ச்சியாக, மீதமாயிருந்த 06 சைக்கிள்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வடக்கு திம்பிலி கிராமம், நெருக்கடிகள் நிறைந்த கிராமமாக இனங்காணப்பட்டு அங்கிருந்து தொலைதூரம் சென்று கல்வி பயிலும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 06 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

Read more

dddfdfffffdfdஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, முதலாவது கடமை விஜயத்தை, நேற்று யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு மேற்கொண்டிருந்தார்.

இவருக்கான வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து அவரால் பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தினுள், மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியினால், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் குடாநாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை வழங்கும் நிகழ்வு, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. Read more

IMG_5939நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பகளிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர்.

அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

1. வவுனியா இறம்பைக்குளத்தில் வதியும் மறைந்த கழக உறுப்பினர் கந்தசாமி (ரெயிலர்) இன் குடும்பத்தினர் தற்போது சிறிய அளவில் நடாத்தி வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை விருத்தி செய்யுமுகமாக ரூபா 35,000/-ம், Read more

gfgfgசார்க் நாடு­களின் சுகா­தார அமைச்­சர்­களின் மாநாடு 06 ஆவது தட­வை­யாக கொழும்பு, கல்­கிஸ்­ஸையில் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தலை­மையில் ஆரம்­ப­மா­கி­யுள்ள இம்­மா­நாடு சார்க் வலய நாடு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வமிக்­க­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

மேலும் இம்­மா­நாட்டின் போது சுகா­தார பிரச்­சி­னைகள் தொடர்­பி­லேயே கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. தொற்றா நோய்கள், ஊட்­டச்­சத்து குறை­பாடு, எச்.ஐ.வி நோய், சய­ரோகம் உள்­ளிட்ட பல நோய்கள் தொடர்பில் இதன்­போ­து கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்ததக்கது.

ertrtrயாழ்ப்பாணம் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தூர் – மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்றுகாலை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். Read more

Shahbaz-Sharif-1-1நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து, அந் நாட்டின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்றுமாலை நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டார். இவர், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு தேர்தல் வரும்வரை பாகிஸ்தான் பிரதமராக செயற்படுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more