சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் மாநாடு 06 ஆவது தடவையாக கொழும்பு, கல்கிஸ்ஸையில் ஆரம்பமாகியுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாடு சார்க் வலய நாடுகளுக்கு முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.
மேலும் இம்மாநாட்டின் போது சுகாதார பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றா நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, எச்.ஐ.வி நோய், சயரோகம் உள்ளிட்ட பல நோய்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்ததக்கது.