wererயாழ்ப்பாணம் மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 1.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மண்டைத்தீவிற்கு சென்ற 14 பேரில் 7 பேர் சிறுதீவிற்கு வள்ளத்தில் சென்றுள்ளனர்.இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் தப்பிச்சென்று கடற்படையினருக்கு தகவல் வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டார். உரும்பிராய், சண்டிலிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.