P1460233யாழ். ஏழாலை சன்மார்க்க முன்பள்ளிக் கட்டிடத்திற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (29.08.2017) உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்படி கட்டிடத்திற்கென 3லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உதவி வழங்கும் நிகழ்வில் சன்மார்க்க முன்பள்ளியின் நிர்வாகி மல்லி ஆசிரியை. பிரதேச செயலாளர் மதுமதி, முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.