yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

வாகனம் ஒன்றின் நிறத்தை மாற்றியமை தொடர்பிலான விசாரணையில் வாக்குமூலம் பெறுவதற்காகவே தான் அழைக்கப்பட்டிருப்பதாக யோஷித ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்றைய தினம் ஷிராந்தி ராஜபக்ஷ விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த வேளை அங்கு வருகை தந்திருந்த யோஷித ராஜபக்ஷ இதனைக் கூறியிருந்தார். பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்களிடம் விசாணைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. இது தவிர சீனாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுப்ரீம் செட் 01 (SupremeSAT-I)செய்மதி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நேற்று ஆஜராகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.