IMG_5916ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு இன்று (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவன்(இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்)அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) இளைஞரணி செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமனா கழக இயக்குனர் திரு இராஜசிங்கம், உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு எ.ஜோன்சன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் திரு தி.அமுதராஜ், ஆசிரியர் திரு ரவி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு வ.பிரதீபன், உப தலைவர் திரு பி.கெர்சோன், நிர்வாக உறுப்பினர் திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_5900 IMG_5903 IMG_5906 IMG_5909 IMG_5914 IMG_5916 IMG_5918 IMG_5919 IMG_5920 IMG_5921 IMG_5924 IMG_5925 IMG_5928 IMG_5934 IMG_5959 IMG_5961 IMG_5966