kekaliyaஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட தொலைபேசியின் மாதாந்தக் கட்டணத்தை செலுத்த, அரச அச்சக கூட்டுத்தபானத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்படி, 230,000 ரூபாவுக்கும் அதிக பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இருவரையும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.