Header image alt text

Sharjahசார்ஜாவிலுள்ள ஒரு ஹோட்டல் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள், பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டதில், இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, 55 வயதான தந்தை, 54 வயதான தாய் மற்றும் அவர்களது 19 வயதான மகனும் சம்பவத்தில் பலியானதோடு, அவர்களது உறவினர்களாக கருதப்படும் இரு பெண்களே காப்பாற்றப்பட்டுள்ளனர். Read more

indian schifஇலங்கையின் கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு கடல் எல்லை பாதுகாப்பிற்கான கப்பல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

இதன்படிஇ இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங்இ வருண என்ற இந்தக் கப்பலைஇ இலங்கை கரையோர பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் நேற்றையதினம் கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு கொச்சியில் இடம்பெற்றது

ssதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வும், “இலட்சிய இதயங்களோடு” நூல் வெளியீட்டு விழாவும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் நேற்று(03.09.2017) மாலை வண.கலாநிதி சு.ஜெபநேசன்; தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தளும், சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி கனக மனோகரனும் கலந்துகொள்ள “இலட்சிய இதயங்களோடு” நூலினை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டு வைத்தார். Read more

sampanthan visit durgadevi kovil (1)யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவும் கொடியிறக்க நிகழ்வும் நேற்று (03.09.2017) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஆலய தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தபோது ஆலயத் தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் அவரை வரவேற்று உபசரித்தார்கள். Read more

NPC20வது அரசியலமைப்பு திருத்தம் வட மாகாண சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில்

ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர் தமது முழு ஒத்துழைப்புடன் தோற்கடித்துள்ளனர்.

sdsவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்றுகாலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

கிராமிய பெண்கள் அமைப்பு, கிராம முகாமைத்துவ சம்மேளனம், சர்வமதக்குழுக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த அமைதிப்பேரணியானது, Read more

sdsvvயாழ். வலிகாமம் வடக்கு இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஊறணியில் சில பகுதியளவிலான இடங்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அங்கு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு குடியமர்ந்துள்ள மக்கள், படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய, படையினர் இப்பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை விடுவித்தனர். இக்காணிகளை, யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன கெட்டியாராச்சி, கையளித்தார்.

sfdfdஅம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டு எதிரே வந்த பேரூந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் திருக்கோவில் 3 ஆம் பிரிவு வாகீசா வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். Read more

D.sithadthanஓன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கின்ற 20ஆவது திருத்தச் சட்டம் இன்று அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு என்ன தேவை இருக்கின்றது என்பது புரியவில்லை. ஜனநாயக ரீதியாக ஒரு சபையை உருவாக்க வேண்டுமாகவிருந்தால் மக்களுடைய விருப்பை முதலில் அறிய வேண்டும்.

எனவே, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் நிறைவடையவிருக்கின்ற கிழக்கு, வட மத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகள் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதுடன், இந்த இரண்டு வருடங்களில் அந்த மாகாண சபைகளினுடைய ஆட்சி ஆளுநரின் கீழ் நடைபெறப்போகின்றதா? அல்லது வேறு வழிகள் ஏற்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
Read more

ddddddயாழ். சுன்னாகம் வாழ்வகத்தின் 30ஆவது ஆண்டினை முன்னிட்டு கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 11.09.2017 திங்கட்கிழமை காலை 9மணியளவில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகத்தின் செல்லா மண்டபத்தில் திரு. ஆறுமுகன் ரவீந்திரன் (தலைவர், வாழ்வகம்) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக திரு. அ.பத்திநாதன்(பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்), அவர்கள் கலந்து கொள்வதோடு, நினைவுப் பேருரையினை வைத்தியக்கலாநிதி த.சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை) அவர்கள் ஆற்றவுள்ளார். Read more