Header image alt text

european unionஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அதேநேரம், பல விடயங்களில் இன்னும் மீளமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட நிலை அதிகாரிகள் பிரசல்ஸில் இருந்து வருகை தந்து கடந்த 10 நாட்களாக தகவல் அறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். Read more

sivaji teamஐக்கிய நாடுகள் சபையின் 36ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனீவா சென்றடைந்துள்ளது.

இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தியாகராசா, பா.கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர். Read more

denmarkஇலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

டென்மார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரோல்ஸ் ராவின்ஸ் மற்றும் டென்மார்க்கின் சோஷலிஷ ஜனநாயக கட்சியின் நிறைவேற்று உறுப்பினர் தர்மகுலசிஙகம் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு பணம் மேற்கொண்டிருந்தனர். Read more

mahinda desapriya (3)உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் திகதியோ அல்லது அதற்குப் பின்னரோ நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, இவ்வாண்டு டிசம்பரில், தேர்தல்களை நடத்த முடியாது. டிசம்பர் 9ஆம் திகதி என எமக்குச் சாத்தியமான திகதியில் தேர்தல்களை நடத்த வேண்டாமென, பரீட்சைகள் ஆணையாளர், எம்மிடம் கோரியுள்ளார் என அவர் நேற்று தெரிவித்துள்ளார். Read more

gazzetteகாணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானியில் அவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

ereegggயாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் இளைஞர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பிலான கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றிருந்தன.
Read more

fghfghfgயாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இன்று இரு பாடசாலைகளுக்கும், இளைஞர் கழகம் மற்றும் கலாச்சாரப் பேரவை என்பவற்றிற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது செங்குந்தாய் இந்துக் கல்லூரிக்கு சுழல் கதிரைகள் மற்றும் மேஜைகளும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரிக்கு பல்ஊடக எறியீயும் (Multimedia Projector), குமரகோட்டம் இளைஞர் கழகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகளும், மாவட்ட கலாச்சார பேரவைக்கு வெங்கலப் பொருட்களும் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டன. நிகழ்வில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் அவர்களும் கலந்து கொண்டிருந்ததார். Read more

jjjjjjயாழ். அரியாலை சனசமூக நிலையத்திற்கு புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது அரியாலை சனசமூக நிலையத்தின் செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தொகுதி கதிரைகளைக் கையளித்தார். நிகழ்வில் யாழ். மாநகரசபை துணை ஆணையாளர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

sasikalaஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை இரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாத்திரமே நிரந்தர பொது செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுகவில் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளர் எனும் பதவி இருக்காது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் கட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. Read more

arundika fernandoசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின்படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more