Header image alt text

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (10) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று (09) காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து இந்த வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன. Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப் பறிமாற்றல் நடவடிக்கைக்கு ஆபத்தான கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை தவிர துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. Read more

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய வீடியே ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து வௌியிட்டுள்ளன.

வாக்காளர்களை தௌிவூட்டும் நோக்கில், புதிய தேர்தல் முறைக்கு அமைய வாக்களிக்கும் முறை சம்பந்தமான தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. Read more

சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் இண்டர்பொல் சிவப்பு அறிவித்தல் ஒன்று இல்லை என்றும் உறுதியானதையடுத்து தான் சர்வதேச பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தால் தனக்கு ஏற்பட்ட பாரிய அரச பழிவாங்கல் காரணமாக தற்போது இலங்கைக்கு வருகை தரும் நோக்கம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். Read more

2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும்  இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் யாழ். சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் இன்று இடம்பெற்றது.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் இணைந்து தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் அமைந்துள்ள சந்தைக் கட்டிடம், வீடுகள் மற்றும் கடைகடையாகச் சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

Read more

புனரமைப்பே எமது மூச்சு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது. 

வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியற் பிரதிநிதித்துவம் பேரினவாதக் கட்சிகளிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக, இன்றல்ல, இற்றைக்கு 23 வருடங்களுக்கு முன்பே, தேர்தலில் கிடைக்கக்கூடிய ஆசனங்களுக்காக இன்று முண்டியடித்துக் கொண்டிருக்கும் எராளமான தமிழ் அரசியல்வாதிகளின் ஏளனப் பேச்சுக்களையும் எதிர்ப்புகளையும் புறம்தள்ளி திட்டமிட்டு செயற்பட்டிருந்தோம். Read more

பாடசாலைகள் மற்றும் சிறுவர் நிலையங்களில், சிறுவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக தண்டனை ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. சர்வதேச பாடசாலைகளினுள் இடம்பெறும் சிறுவர் சித்திரவதை தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வேலைத்திட்டம் சர்வதேச பாடசாலைகளிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. Read more

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இதுத்தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இன்று இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.