கண்ணீர் அஞ்சலிகள்
எமது தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அன்னை திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் பிரிவினை மிகுந்த கவலைகளுடன் ஏற்றுக்கொண்டு அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களினதும் அவரது புத்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தனினதும் பண்பட்ட, மக்கள் நலன் சார்ந்த, எளிமையான தலைமைத்துவங்களின் பின்னால் சரஸ்வதி அம்மாவின் செயற்பாடுகள் உறுதியான ஆதாரமாக அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.
இரண்டு மகத்தான மக்கள் பிரதிநிதிகளை பாசத்துடனும், பண்புடனும், பரிவுடனும் வழிநடாத்திய சரஸ்வதி அம்மா அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே வாஞ்சையோடும், உரிமையோடும் தனது மகனின் கட்சித் தோழர்களையும் அரவணைக்கத் தவறியதில்லை.
Read more
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ்ப்பாண மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில், குற்ற விசாரணை திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.