புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.
இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும். Read more
மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.
காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகிறது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நேற்று ஜப்பானுக்குச் சென்றதை அடுத்து, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு – ஆமர் வீதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.