இலகு தொடரூந்து முறைமையினை இலங்கை தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடரூந்து சேவை ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைய 7 இலகுரக தொடரூந்து பாதைகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது திட்டம் முன்னுரிமை அடிப்படையில் கொழும்பில் இருந்து பொரளை, பத்தரமுல்ல, ஊடாக மாலபேக்கு அமைக்கப்படவுள்ளது. Read more
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க செயலணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மா நகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும், நாளை முதல் நவீன முறையில் கணினி மயப்படுத்தப்படவுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாக காரணமாகும்.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 22 வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் ((URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி ((Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் இன்று காலை, பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில், நுவரெலியா, வெலிமடை, ஹக்கல, நானுஒயா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்கள் இடம்பெற்றன.
சொத்து விபரங்களை வெளிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களினது விண்ணப்பங்கள் சமீப காலமாக வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.