இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் எல்லாம் உதவியளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங், இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தொட்டையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளையும், முதலீட்டு வேலைத்திட்டங்களையும் வழங்கியுள்ளது. Read more
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய வருமான வரி சட்டத்தின் மூலம் 5 இலட்சம் பேர் வரி அறவீட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையர் தொடர்பில், விதிக்கப்பட்டிருந்த புதிய சட்டத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு, சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண அமைச்சர்கள் மீது உள்ளுர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்றுகாலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் 476 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமான உயிரிழப்புக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே இடம்பெற்றுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆளணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
புதிய தேர்தல் முறைமைகள் தொடர்பில் கருத்துரைப்பதற்கும் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்குமான சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுப்பதற்கு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெஃபரல்) தீர்மானித்துள்ளது.