பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிகபடியான ஏதிலிகள் உள்வாங்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பியாவைத் தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் வழக்கை விசாரணை செய்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சகாய பாதுகாப்பு பெற முடியும் என்று அறிவித்திருந்தது. Read more
		    
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய, சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்க, கட்சி தீர்மானித்துள்ளதாக, சு.கவின் உப செயலாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. 
மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். 
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வட மாகாணத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 
தமிழகத்தில் தற்போது 95 ஆயிரம் ஈழ ஏதிலிகள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மீள்க்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் தகவல்களில் இந்த விடயத்தை அறியக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 193 ஈழ ஏதிலிகள் தங்கியுள்ளனர்.