இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.இரண்டு நாடுகளின் சுங்கப் பிரிவுகளும் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.