Header image alt text

அரச வைத்திய அதிகாரிகளால் நேற்றுக்காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம், இன்றுகாலை 08 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுதல், அடிப்படை சம்பளங்களை உயர்த்துதல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்முனை பொது மயான வீதி மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தேசிய கட்டிட நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் கல்முனை கிளை அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (04.08.2018) நடைபெறவிருந்த நிலையில், அப்பிரதேச தமிழ்ப் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இரத்துச் செய்யப்பட்டது.

கல்முனையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வலுவலகத்துகக்கான கட்டிடம் அமைக்கப்படவிருந்தது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்டிட நிர்மாண ஒப்பந்க்காரர்கள் அமைப்பின் தலைவர் அத்துல பிரியந்த கலகொட ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கவிருந்தனர். Read more

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். Read more